தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

14 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image

கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்

படம் | AP

Updated On :9 பிப்ரவரி 2025, 9:19 am

DIN

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. காலேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 257 மற்றும் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 414 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அணி 75 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

டிராவிஸ் ஹெட் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா 27 ரன்களுடனும், மார்னஸ் லபுஷேன் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

14 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி, இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடைசியாக ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு, 1-0 என்ற கணக்கில் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது.

அதன் பின், கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தற்போது, ஆஸ்திரேலிய அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இலங்கையில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய அலெக்ஸ் கேரிக்கு ஆட்ட நாயகன் விருதும், தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்துக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.