மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒருநாள் போட்டிகள் திறமைகளின் உச்சம்! -ஜெய் ஷா புகழாரம்

சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஜெய் ஷா..

News image
Updated On :14 பிப்ரவரி 2025, 7:51 am

DIN

ஒருநாள் போட்டிகள் திறமைகளின் உச்சம் என ஐசிசி தலைவர் ஜெய் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கிறது.

இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது போட்டி வருகிற 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி தொடர் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

பரிசுத் தொகை

8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 8 அணிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளான வெற்றியாளர் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்களும் (ரூ.19.45 கோடி), ரன்னர் அணிக்கு 1.12 மில்லியன் டாலர்களும் (ரூ.9.72 கோடி) வழங்கப்படவிருக்கிறது. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு 560,000 டாலர்கள் (ரூ.4.86 கோடி) வழங்கப்படவுள்ளது. 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் பரிசுத் தொகை 53 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதன் மதிப்பு மொத்தமாக 6.9 மில்லியன் டாலர்கள்(ரூ.59.9 கோடி) ஆகும்.

லீக் சுற்றின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு 34,000 டாலர்கள்(ரூ.29.5 லட்சம்) கிடைக்கும். 5 மற்றும் 6 வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு 3,50,000 (ரூ.3.04 கோடியும்), 7 மற்றும் 8-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 1,40,000 (ரூ.1.21 கோடியும்) கிடைக்கும். மேலும் போட்டியில் பங்கேற்றதற்காக ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் 1,25,000 டாலர்கள் (ரூ.1,21 கோடி) கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய் ஷா

சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஐஐசி தலைவர் ஜெய்ஷா கூறுகையில், “2025 ஆம் ஆண்டு ஆடவருக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தை பிரதிபலிக்கிறது. இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாக இருக்கும்.

ஒருநாள் போட்டி திறமைகளின் உச்சத்தை எடுத்துக்காட்டும். இந்தப் பரிசுத் தொகையானது விளையாட்டில் முதலீடு செய்வதற்கும், வருங்காலங்களில் கிரிக்கெட்டின் மதிப்பைக் கூட்டுவதற்கும் ஐசிசியின் தற்போதைய நிலைப்பாட்டை கூறுகிறது” எனத் தெரிவித்தார்.

ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி 20 ஓவர் வடிவில் வருகிற 2027 ஆம் ஆண்டு முதல் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.