இந்திய வீரர்கள் ஓராண்டில் 10 மாதங்களும் விளையாடினால் காயம்தான் ஏற்படுமென கபில் தேவ் கூறியுள்ளார்.
இந்தியாவின் என்சிஏ (தேசிய கிரிக்கெட் அகாதெமி) காயமடைந்தவர்களின் முகாந்திரமாக மாறி வருகிறது.
பிஜிடி தொடரில் சிட்னியில் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக வெளியேறினார். அதனால் அந்தத் தொடரை இழந்த இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடமாட்டார் என்ற அதிர்ச்சி மேலும் நிலை குலைய செய்தது.
ஷமி காயத்தினால் ஓராண்டு விளையாடாமல் இருந்தார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பிப்.22ஆம் தேதி மோதுகிறது.
இந்த நிலையில் கபில் தேவ் கூறியதாவது:
இந்திய வீரர்கள் ஓராண்டுக்கு 10 மாதங்களும் கிரிக்கெட் விளையாடுவதுதான் என்னை கவலைக்குள்ளாக்குகிறது. அதனால்தான் காயம் அதிகமாக ஏற்படுகிறது.
அணியில் இல்லாதவர்களைக் குறித்து ஏன் பேச வேண்டும்? இது குழுவிற்கான போட்டி. தனி மனிதர்களுக்கானது அல்ல. இது டென்னிஸ், பாட்மின்டன், கோல்ப் போன்றது இல்லை. ஆனால், எதாவது நடந்தால் உங்களால் எதுவும் செய்ய முடியாது. இந்திய அணிக்கு வாழ்த்துகள். நன்றாக விளையாடுங்கள்.
இளைஞர்களை பார்க்கும்போது நம்பிக்கை பிறக்கிறது. நாங்கள் இளைஞர்களாக இருக்கும்போது அந்தளவுக்கு நம்பிக்கையுடன் இல்லை. அவர்களுக்கு வாழ்த்துகள்.
கிரிக்கெட் விளையாடவில்லை எனில் கோல்ப் விளையாட செல்லுங்கள். அதில் நல்ல அனுபவம் கிடைக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

2026 உலகக் கோப்பைப் போட்டியில் நான்கு இந்திய வீரர்கள்!

சூர்யவன்ஷியிடம் அதிகம் எதிர்பார்ப்பது தவறு: கபில் தேவ்

கபில் தேவ் வெளியிட்ட 'பெட்டர் நெவர் ஸ்டாப்ஸ்' நூல்! |
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



