திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சாப்பிட பணமில்லாமல் கஷ்டப்பட்டவர் இன்று மும்பை அணியின் பெருமைமிக்க கேப்டன்: நீதா அம்பானி

பாண்டியா சகோதரர்கள் குறித்து நீதா

News image

நீதா அம்பானி, ஹர்திக் பாண்டியா. - ANI

Updated On :17 பிப்ரவரி 2025, 11:41 am IST

பாண்டியா சகோதாரர்களிடம் முதல்முறையாக பேசியபோது நல்ல உணவுக்கு கஷ்டப்பட்டவர்களாக இருந்தார்கள் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்தாண்டு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றார். இந்தாண்டும் அவர் கேப்டனாக நீடிக்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி, பாண்டியா சகோதரர்கள், பும்ரா, திலக் வர்மா போன்ற திறமையான வீரர்களை அறிமுகப்படுத்தியது குறித்து விவரித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“ஐபிஎல் பொறுத்தவரை அனைத்து அணிகளுக்கும் குறிப்பிட்ட பட்ஜெட் மட்டுமே ஒதுக்குவார்கள். அதனால், குறிப்பிட்ட தொகையில் திறமையான வீரர்களை வெளி கொண்டுவர வேண்டியது அவசியம்.

அதனால், ஒவ்வொரு ரஞ்சி கோப்பை மற்றும் உள்நாட்டு தொடர்களுக்கு நானும் எனது குழுவும் சென்று வீரர்களை பார்ப்போம்.

ஒருநாள், மெலிந்த இரண்டு இளம் வீரர்களுடன் உரையாடினோம். அவர்களுடன் நான் பேசியபோது, பணமில்லாததால் மூன்று ஆண்டுகளாக மேகி மற்றும் நூடுல்ஸ் தவிர வேறெதுவும் சாப்பிடவில்லை என்று கூறினார்கள். ஆனால், வாழ்க்கையில் பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை அவர்களிடம் பார்த்தேன். அவர்கள்தான் ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்டியா.

2015ஆம் ஆண்டு ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினேன். இன்று அவர் எங்கள் அணியின் பெருமைமிக்க கேப்டன். அடுத்தாண்டே எங்கள் அணியில் வித்தியாசமான உடல்மொழியுடன் பந்துவீசும் இளம் வீரரை அறிமுகப்படுத்தினோம். மற்றதெல்லாம் வரலாறு.

கடந்தாண்டு திலக் வர்மாவை அறிமுகப்படுத்தினோம். அவர் தற்போது இந்திய அணியின் பெருமைமிக்க வீரராக உள்ளார். எனவே, மும்பை இந்தியன்ஸை இந்திய கிரிக்கெட்டின் நர்சரி பள்ளி என்று அழைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.