துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்துப் போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன.
இதையும் படிக்க: மகனுடன் இணைந்து பேட்டிங் செய்த ராகுல் டிராவிட்!
இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றியுடன் தொடங்கியது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தானை எதிர்த்து, இந்திய அணி நாளை துபையில் நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ளது.
300 - 325 ரன்கள் மிக நல்ல ஸ்கோர்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், துபை ஆடுகளத்தில் 300 - 325 ரன்கள் மிகவும் சிறந்த ஸ்கோர் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் அனைத்துப் போட்டிகளிலும் கண்டிப்பாக நேர்மறையான எண்ணங்களுடனும், ஆக்ரோஷமாகவும் விளையாட வேண்டும். துபை ஆடுகளங்களில் 300 - 325 ரன்கள் மிகவும் நல்ல ஸ்கோர். ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். இங்கு பனிப்பொழிவு இல்லாததால் டாஸ் வெல்வது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியின் மீது அதிகப்படியான அழுத்தம் இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒருநாள் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய ஷுப்மன் கில்!
இரட்டைச் சதத்தைத் தவறவிட்ட ஷுப்மன் கில்: 402 ரன்களைக் குவித்து இந்தியா சாதனை!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!

கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் சதம்; வலுவான நிலையில் இந்திய அணி!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



