இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளார்.

News image

படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :28 பிப்ரவரி 2025, 2:27 pm

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன. சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி என முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியதால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. சரியாக விளையாடாததால் பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

புதிதாக கட்டமைக்கும் நேரம்

முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முன்னாள் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்களை முன்வைப்பதை பார்க்கிறேன். தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதால் நாம் ஏன் பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கக் கூடாது? அதனால் எந்த ஒரு கெடுதலும் வந்துவிடப் போவதில்லை. நாம் தோல்வியடைவோம். ஆனால், குறைந்தது புதிதாக ஏதோ ஒன்றை முயற்சித்திருப்போம். அணியில் உள்ள வீரர்கள் நல்ல வீரர்கள் இல்லை என யாரும் கூறவில்லை. ஆனால், யாராக இருந்தாலும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு அணியில் இடம்பெற வேண்டும் என்றே கூறுகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.