மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

உள்ளூர் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட வேண்டும்; பயிற்சியாளர் கருத்து!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

News image

ரோஹித் சர்மா - படம் | AP

Updated On :6 ஜனவரி 2025, 9:36 pm IST

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக இழந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. இருப்பினும், இறுதியில் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தொடரை இழந்ததுடன் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் கனவும் தகர்ந்தது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக, மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், முன்னாள் வீரர்கள் பலரும் மூத்த வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு தயாரவதற்கு ரோஹித் சர்மா உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மாவுக்கு இரண்டு இலக்குகள் மட்டுமே இருந்ததாக நினைக்கிறேன். முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்ல வேண்டும். இரண்டாவது, இந்திய அணிக்கு இரண்டாவது முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றுக் கொடுப்பது. டி20 உலகக் கோப்பை முடிவடைந்தவுடன் அவர் அனைத்து வடிவிலான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் ஒருவர் மட்டுமா ரன்கள் குவிக்கத் தடுமாறுகிறார். மற்ற வீரர்களும் ரன்கள் எடுக்கத் தடுமாறுகிறார்கள். டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராவதற்கு ரோஹித் சர்மா, ஒன்று அல்லது இரண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.

டி20 கிரிக்கெட்டின் தாக்கத்தால் பேட்ஸ்மேன்களின் மனநிலை மாறிவிட்டது. ரோஹித் சர்மா மிகச் சிறந்த வீரர். இங்கிலாந்துக்கு எதிராக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார். இந்திய அணி வெற்றி பெற்றால், ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்கிறோம். ஆனால், தோல்வியடைந்தால் ரோஹித் சர்மாவுக்கு அணியைக் கேப்டனாக வழிநடத்தத் தெரியவில்லை என்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.