இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கொல்கத்தா பனிப்புகையை குற்றம்சாட்டிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்!

கொல்கத்தாவின் பனிப்புகையினால் சரியாக ஆட முடியவில்லையென இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் குற்றச்சாட்டு.

News image
ஹாரி புரூக்- படம்: ஏபி
Updated On :25 ஜனவரி 2025, 6:51 am

DIN

கொல்கத்தாவின் பனிப்புகையினால் சரியாக விளையாட முடியவில்லையென இங்கிலாந்து துணை கேப்டன் ஹாரி புரூக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜன.22இல் தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

2ஆவது டி20 சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு (ஜன.25) நடைபெறவிருக்கிறது

இந்த நிலையில் ஹாரி புரூக் கொல்கத்தாவின் பனிப்புகையினால் சுழல்பந்துகளை ஆட முடியவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹாரி புரூக் 14 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார். வருண் சக்கரவர்த்தி (3/23) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஹாரி புரூக் கூறியதாவது:

பனிப்புகைதான் காரணம்

நான் பிஷ்னோயை விளையாடவில்லை. ஆனால், வருண் சக்கரவர்த்தி தலைசிறந்த பந்துவீச்சாளர். அவரது பந்தினை கணிக்க முடியவில்லை. அநேகமாக அன்றைய இரவு பனிப்புகையினால் பந்தினை சரியாக பார்க்க முடியவில்லை என நினைக்கிறேன். சென்னையில் பந்து நன்றாக தெரியும். அதனால் இங்கு பந்தினை பார்ப்பது சற்று எளிதாக இருக்கும் என நம்புகிறேன்.

வருண் சக்கரவர்த்தி அற்புதமான வீரர். பல திறமைகளுடன் துல்லியமாக பந்து வீசுகிறார். இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்கள் மீது சென்னையில் அழுத்தத்தை அளிப்போம் என நம்புகிறேன் என்றார்.

இதேபோல் இதற்கு முன்பும்...

இதேபோல் இதற்கு முன்பு 1992-93இல் டெட் டெக்ஸ்டர் முதல் டெஸ்ட் தோல்விக்கு பனிப்புகையை காரணம் கூறியிருந்தார். 2017ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற இந்தியா-இலங்கை போட்டியில் சில வீரர்கள் வாந்தி எடுத்ததால் போட்டி கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.