தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரஞ்சி கோப்பை: கட்டுப்பாட்டை மீறி விராட் கோலியின் காலைத் தொட்ட ரசிகர்!

ரஞ்சி கோப்பை போட்டியில் விராட் கோலியின் காலைத் தொட்டு கும்பிட்ட ரசிகரின் விடியோ வைரலாகி வருகிறது.

News image

கட்டுப்பாட்டை மீறி விராட் கோலியின் காலைத் தொட்ட ரசிகர்

படங்கள்: எக்ஸ் / வினய் விகே18

Updated On :30 ஜனவரி 2025, 7:35 am

DIN

ரஞ்சி கோப்பை போட்டியில் விராட் கோலியின் காலைத் தொட்டு கும்பிட்ட ரசிகரின் விடியோ வைரலாகி வருகிறது.

ரயில்வேஸ் அணிக்கு எதிராக இன்று (ஜன.30) தில்லி அணி ரஞி கோப்பையில் விளையாடி வருகிறது.

12 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுகிறார். கடைசியாக அவர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காஸியாபாத்தில் நடந்த உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார்.

விராட்கோலி விளையாடவிருப்பதால் நார்த் எண்ட், ஓல்ட் கிளப் ஹவுஸ் ஸ்டாண்ட் பகுதிகள் பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன.

ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த விராட் கோலியிடம் ஓடிவந்த ரசிகர் திடீரென காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்டார்.

டாஸ் வென்ற தில்லி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்துவரும் ரயில்வேஸ் அணி 30 ஓவர் முடிவில் 94/5 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இந்தப் போட்டியில் கட்டுப்பாடுகளை மீறிய ரசிகர் ஒருவர் கோலியின் காலைத் தொட்டு கும்பிட்டார். பின்னர், அவர் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

இந்த விடியோ இணையத்தில் வைரலானது. காலில் ஏன் விழ வேண்டும்? என இது பல்வேறு விதமான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

ரசிகரின் செயலினால் கோபமடையாத கோலி பொறுமாயாக இருந்தார். அவரை எழுப்பி அமைதியாகக் கூட்டிச்செல்லுமாறு சைகை காண்பிப்பார். விராட் கோலி ரசிகர்கள் கோலியின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

காலை 5 மணி முதலே ரசிகர்கள் வரிசையில் காந்திருந்து போட்டியை பார்க்க ஆவலுடன் வந்திருக்கிறார்கள்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய வீரர்கள் யாரும் சரியாக சோபிக்காததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகினர். இதனால், வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடவேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து கோலி விளையாடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.