ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இல்லை; காரணம் என்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இருக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம் - படம் | ஐசிசி

Updated On :30 ஜனவரி 2025, 4:21 pm

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இருக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன.

கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இல்லை

ஐசிசி தொடர் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளின் கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இருக்கும். கேப்டன்கள் அனைவரும் குழுவாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வார்கள். ஆனால், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக, இவை எதுவும் இருக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக, அனைத்து அணிகளுக்குமான பயண அட்டவணை மாற்ற முடியாத அளவுக்கு கடிமனாக உள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடக்க விழா பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.