
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அசத்திய முகமது சிராஜுக்கு அர்ஷ்தீப் வழங்கிய பாராட்டு நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
இந்திய அணியில் பும்ரா முக்கியமான பந்துவீச்சாளர். கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பும்ரா குறித்து சிராஜ், “நான் ஜஸ்ஸி பாயை மட்டுமே நம்புகிறேன். ஏனெனில் அவர் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரே வீரர் அவர் மட்டுமே” என தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் பேசியது வைரலானது.
(ஐ ஒன்லி பிளிவ் ஆன் ஜஸ்ஸி பாய், பிகாஸ் ஹீ இஸ் கேம் சேஞ்சர் பிளேயர் ஹீ இஸ், ஒன்லி ஒன் காய் ஜஸ்பிரீத் பும்ரா - சிராஜ் பேசியது).
தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா இல்லாமல் சிராஜ் அசத்தியதால் அந்த வசனத்தை மாற்றும்படி சிராஜிடம் அர்ஷ்தீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வசனத்தை மாற்றுங்கள் சிராஜ் - அர்ஷ்தீப் புகழாரம்
டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் முடிவுக்குப் பிறகு சிராஜ் பிசிசிஐ நேர்காணலில் பேசிக்கொண்டிருந்தபோது அர்ஷ்தீப் அருகே வந்து, “திட்டங்கள் மாறிவிட்டன. நீங்கள் வசனத்தை மாற்றுங்கள் சிராஜ். ’இனிமேல் நான் என்னையும் பும்ராவையும் நம்புவேன்’ என மாற்றுங்கள்” என்றார்.
இது சிராஜிக்கு மிகப்பெரிய கௌரமாகக் கருதப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த விடியோவும் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலமாக ஃபாலோ-ஆனை தவிா்த்த அந்த அணி, தற்போது 180 ரன்கள் பின்தங்கியுள்ளது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்தின் பேட்டர்களை ஆகாஷ் தீப், சிராஜ் கூட்டணி வீழ்த்தினார்கள்.
குறிப்பாக இந்தப் போட்டியில் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
The dialogue has been changed! Mohammed Siraj's famous one-liner is now, 'I Only Believe In Myself And Jassi Bhai', thanks to fellow pacer Arshdeep Singh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.