திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கிங்ஸ்டன் டெஸ்ட்: ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் இழப்பு, ஆஸி. 181 ரன்கள் முன்னிலை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸி. கடைசி டெஸ்ட் குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள். - படம்: ஏபி

Updated On :14 ஜூலை 2025, 1:35 pm IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2-ஆம் நாள் முடிவில் ஆஸி. 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

ஜமைக்காவில் பகலிரவு ஆட்டமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டி காலை 7.30 மணி வரை நடைபெறுகிறது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 2250க்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் 143க்கு ஆட்டமிழந்தது.

இரண்டாம் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் முடிவில் 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

களத்தில் பாட் கம்மின்ஸ் 5 ரன்களுடனும் கேமரூன் க்ரீன் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் அல்ஜாரி ஜொசப் 3, ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

ஒரே நாளில் இரண்டு அணிகளும் சேர்த்து 15 விக்கெட்டுகளை (மே.இ.தீ. 9 + ஆஸி. 6) இழந்துள்ளன.

தற்போது, 2-ஆம் நாள் முடிவில் ஆஸி. 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.