ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடைசி டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட் பிராட்

இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

jofra archer

ஜோஃப்ரா ஆர்ச்சர் - படம் | AP

Published On :29 ஜூலை 2025, 4:50 pm IST

இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 31) ஓவலில் தொடங்குகிறது.

ஆர்ச்சருக்கு ஓய்வளியுங்கள்

தொடரை வெல்வதற்கான முக்கியமான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும். அவருக்கு ஓய்வு அளிக்கப்படாவிட்டால், அவரை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து அணியில் பார்க்க முடியாது. கடைசி டெஸ்ட் போட்டியில் கஸ் அட்கின்சன் விளையாடலாம் என நினைக்கிறேன். அவருக்கு எந்தவித பணிச்சுமையும் இருப்பதாக தெரியவில்லை. மேலும், வலுவான எதிரணியுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் விளையாடியதில்லை என்றார்.

காயம் காரணமாக 4 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமலிருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், லார்ட்ஸ் டெஸ்ட்டின் மூலம் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினார். லார்ஸ்ட் டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜோஃப்ரா ஆர்ச்சர், மான்செஸ்டர் டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு, வருகிற நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. ஆஷஸ் தொடரை கருத்தில்கொண்டு, ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Stuart Broad has said that fast bowler Jofra Archer should be rested for the final Test against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.