தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

அசத்தும் தென்னாப்பிரிக்கா: 4-ஆவது ஓவரில் முதல் ரன் எடுத்த ஆஸி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் முதல் 3 ஓவர்கள் ரன்கள் இல்லாமல் மெய்டன் ஆனது.

News image

ஐசிசி வெளியிட்ட போஸ்டர். - படம்: ஐசிசி

Updated On :11 ஜூன் 2025, 9:59 am

டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் முதல் 3 ஓவர்கள் ரன்கள் இல்லாமல் மெய்டன் ஆனது. ஆஸி.க்கு முதல் ரன் 3.3ஆவது ஓவரில்தான் கிடைத்தது.

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து ரபாடா அசத்தி வருகிறார்.

லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கியிருக்கும் மார்னஸ் லபுஷேன் சிறப்பாகத் தொடங்கியுள்ளார்.

ஆஸி. காக இறுதிப் போட்டியில் முதல் ரன்னை லபுஷேன் எடுத்தார்.

மார்கோ யான்சென் வீசிய 4ஆவது ஓவரில் 4ஆவது பந்தில் லபுஷேனுக்கு இன்சைடு எட்ஜ் வாங்கி 2 ரன்கள் கிடைத்தது.

அதே ஓவரில் கடைசி பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. முதல் 3 ஓவர்கள் மெய்டனில் முடிய 4ஆவது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது.

ரபாடா வீசிய 3 ஓவர்களும் மெய்டனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 4ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

யான்சென் 3 ஓவர்களில் 10க்கும் அதிகமான ரன்களை வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.