/

உலகத் தரத்திலான வீரராக உருவெடுக்கும் வருண் சக்கரவர்த்தி: முரளி விஜய்

வருண் சக்கரவர்த்தி உலகத் தரத்திலான வீரராக உருவெடுத்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

News image

வருண் சக்கரவர்த்தி - படம் | பிசிசிஐ

Updated On :7 மார்ச் 2025, 9:18 pm IST

வருண் சக்கரவர்த்தி உலகத் தரத்திலான வீரராக உருவெடுத்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் நாளை மறுநாள் (மார்ச் 9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையான போட்டியாளர்களாக உள்ளனர்.

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அணிக்கு பலம் சேர்ப்பவராக உள்ளார். குரூப் ஸ்டேஜின் கடைசிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி நியூசிலாந்துக்கு எதிராக களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

அதன் பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பாராட்டிய முரளி விஜய்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், வருண் சக்கரவர்த்தி உலகத் தரத்திலான வீரராக உருவெடுத்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வருண் சக்கரவர்த்தி உலகத் தரத்திலான வீரர் என நினைக்கிறேன். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் உலகத் தரத்திலான வீரராக உருவெடுத்து வருகிறார். ஏனெனில், கேரம் பந்துகளை இத்தனை கட்டுப்பாட்டுடன் அபாரமாக வீசுகிறார். அதனை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்திய அணியில் அவருக்கு மிகவும் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.