சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

புலிகளின் புலி: தில்லி கேப்டனாக அக்‌ஷர் படேல்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :14 மார்ச் 2025, 12:31 pm IST

தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு தில்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் இருந்தார். ஏலத்தில் அவர் லக்னௌ அணிக்கும் கே.எல்.ராகுல் தில்லி அணிக்கும் வாங்கப்பட்டார்கள்.

கே.எல்.ராகுல் வெறுமனே பேட்டராக விளையாடுவாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை தில்லி கேபிடல்ஸ் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தில்லி கேபிடல்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “புலிகளின் புலி” என வர்ணித்து அக்‌ஷர் படேலை கேப்டனாக அறிமுகப்படுத்தியுள்ளது.

31 வயதாகும் அக்‌ஷர் படேல் 6 சீசனாக அணியில் இருக்கிறார். ரூ.16 கோடிக்கு அவரை தில்லி தக்கவைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தில்லிக்காக 82 ஐபிஎல் போட்டிகளில் 967 ரன்கள், 62 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் குஜராத் அணிக்கு தலைமை வகித்திருந்தார். மேலும், இந்தியாவின் டி20 அணிக்கு துணை கேப்டனாக இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.