இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக்கில் அரையிறுதியில் இந்திய அணி ஆஸியை வீழ்த்தியது.
நேற்றிரவு நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 220/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக யுவராஜ் சிங் 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.
94 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மாஸ்டர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி சார்பில் 4 விக்கெட்டுகள் எடுத்த ஷபாஸ் நதீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மற்றுமொரு அரையிறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி, மே.இ.தீ. மாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது.
இதில் வெற்றுபெறுவர்களுடன் இந்திய மாஸ்டர்ஸ் அணி இறுதிப் போட்டியில் மார்ச்.16ஆம் தேதி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!

உலக கோப்பை குத்துச்சண்டை - பலமான இந்திய அணி அறிவிப்பு

44 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்டன் வில்லா!

பாபர் அசாம் 2ஆவது சதம்: 5ஆவது முறையாக பிஎஸ்எல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெஷாவர்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



