புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித், கோலி இடம்பெறுவார்களா? கௌதம் கம்பீர் பதில்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது குறித்து கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

News image

கௌதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா (கோப்புப் படம்) - படம் | பிசிசிஐ (எக்ஸ்)

Updated On :6 மே 2025, 3:59 pm

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது குறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

அணியில் ரோஹித், கோலி இடம்பெறுவார்களா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அணியில் இடம்பெறுவார்களா என்பது குறித்து தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியின் தலைமைப் பயிற்சியாளரின் வேலை அணியில் யார் இடம்பெற வேண்டும் என்பதை தேர்வு செய்வது கிடையாது. அது அணித்தேர்வுக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வேலை. பிளேயிங் லெவனில் யார் இடம்பெற வேண்டும் என்பதை மட்டுமே பயிற்சியாளர் முடிவு செய்ய முடியும். எனக்கு முன்பு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக செயல்பட்டவர்கள் யாரும் அணித் தேர்வுக்குழுவில் இல்லை. நானும் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் கிடையாது.

விராட் கோலி, கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)

விராட் கோலி, கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நன்றாக விளையாடும் வரை தொடர்ந்து அணியில் இருப்பார்கள். வீரர் ஒருவர் தனது கிரிக்கெட் பயணத்தை எப்போது தொடங்க வேண்டும், எப்போது முடிக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட தனிநபரின் முடிவே. எந்த ஒரு பயிற்சியாளரும், தேர்வுக்குழு உறுப்பினரும், பிசிசிஐயும் வீரர் ஒருவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை கூற முடியாது. வீரர் ஒருவர் நன்றாக விளையாடினால், 40 அல்ல 45 வயது வரை கூட விளையாடலாம். யார் தடுக்கப் போகிறார்கள்?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 2027 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவது அவர்கள் விளையாடும் விதத்தை பொருத்தே முடிவு செய்யப்படும். அவர்களது சிறப்பான செயல்பாடுகளே 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர்கள் இடம்பெறுவார்களா என்பதை உறுதி செய்யும். அவர்கள் இருவரது செயல்பாடுகள் குறித்து நான் என்ன சொல்வது? அவர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய விதத்தை இந்த உலகம் பார்த்தது என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.