யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தான் - வங்கதேசம் டி20 தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் கிடையாது; காரணம் என்ன?

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :27 மே 2025, 12:44 pm

DIN

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடரின் முதல் போட்டி நாளை (மே 28) லாகூரில் உள்ள கடாஃபி திடலில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார சூழல்களைக் கருத்தில்கொண்டு வங்கதேசத்துக்கு எதிரான இந்த டி20 தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தானின் நம்பத்தகுந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், அது ஒளிபரப்பாளர்களுக்கு பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், இந்த தொடரில் நடுவர்களின் தீர்ப்பை மேல்முறையீடு செய்து மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டி20 தொடரில் வங்கதேசத்தின் முக்கியமான வீரர்கள் விளையாடமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடியபோது, காயம் ஏற்பட்டதால் வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு வீரர்கள் மட்டுமின்றி, வங்கதேச அணியின் உதவிப் பணியாளர்களும் இந்த தொடருக்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலுக்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.