விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசி வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசி இந்திய வீரர் ரோஹித் சர்மா வரலாறு படைத்துள்ளார்.

News image
அரைசதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா- படம் | AP
Updated On :30 நவம்பர் 2025, 10:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசி இந்திய வீரர் ரோஹித் சர்மா வரலாறு படைத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று (நவம்பர் 30) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக ரன்கள் குவித்தது.

அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரேநெலான் சுப்ராயன் ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

வரலாறு படைத்த ரோஹித் சர்மா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விளாசி ரோஹித் சர்மா வரலாறு படைத்துள்ளார்.

இதுவரை 278 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 352 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். முன்னதாக, 398 போட்டிகளில் 351 சிக்ஸர்களுடன் இந்த சாதனையை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தன்வசம் வைத்திருந்தார். இந்த சாதனையை தற்போது ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள்

ரோஹித் சர்மா - 352* சிக்ஸர்கள்

ஷாகித் அஃப்ரிடி - 351 சிக்ஸர்கள்

கிறிஸ் கெயில் - 331 சிக்ஸர்கள்

சனத் ஜெயசூர்யா - 270 சிக்ஸர்கள்

எம்.எஸ்.தோனி - 229 சிக்ஸர்கள்

summary

Indian batsman Rohit Sharma has created history by hitting the most sixes in ODIs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.