விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

4ஆவது முறையாக தொடக்க வீரர்களில் மாற்றம் செய்த மும்பை இந்தியன்ஸ்..! 2012 சீசன் திரும்புகிறதா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மாற்றம் குறித்து...

News image

ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ். - படம்: இன்ஸ்டா / மும்பை இந்தியன்ஸ்.

Updated On :29 ஏப்ரல் 2026, 8:08 pm IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் நான்காவது முறையாக மாற்றம் செய்துள்ளார்கள். தற்போது, பேட்டிங் செய்துவரும் மும்பை இந்தியன்ஸ் அணி பவர்பிளே முடிவில் ( 6 ஓவர்களில்) 78 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் 41ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மிகவும் முக்கியமான இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கல்டன் மற்றும் வில் ஜாக்ஸ் களமிறங்கியுள்ளார்கள். இது இந்த சீசனில் நான்காவது புதிய தொடக்க வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ரோஹித் - ரிக்கல்டன், டி காக் - ரிக்கல்டன், டி காக் - டேனிஸ் மலேவர் விளையாடியுள்ளார்கள். இருப்பினும் தற்போது புதிய இணையினர் நன்றாக விளையாடி வருகிறார்கள்.

முன்னதாக, 2012 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 புதிய தொடக்க வீரர்களுடன் விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு, மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான தொடக்க வீரர்களைக் கண்டறிந்துள்ளது.

Summary

Mumbai Indians make a change to their opening pair for the fifth time! Is the 2012 season repeating itself?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.