பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ஆசிய விளையாட்டு: இந்திய வீராங்கனை ஜெமிமா விலகல்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா விலகியுள்ளதைப் பற்றி...

News image

ஜெமிமா.

Updated On :36 வினாடிகள் முன்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா விலகியுள்ளார்.

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் உள்ள நகோயாவில், செப். 19 முதல் அக். 4 வரை நடைபெறுகின்றன.

இந்த நிலையில், இந்திய மகளிரணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 'தி ஹன்ட்ரட்' தொடரில் விளையாடியபோது ஏற்பட்ட தொடை தசைநார் காயத்தால் பாதிக்கப்பட்டு, தொடரிலிருந்து விலகினார்.

25 வயதான ரோட்ரிக்ஸுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ஜெமிமாவுக்குப் பதிலாக பிரதிகா ராவல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்... ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஃபுல்மாலி, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜி. கமலினி (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, பிரேமா ராவத், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர், நந்தினி ஷர்மா, கிராந்தி கவுட், பிரதிகா ராவல்.

Summary

India women's team batter Jemimah Rodrigues was on Friday ruled out of the upcoming Asia Cup and Asian Games due to a hamstring injury she sustained earlier this month while playing in The Hundred tournament in England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.