ஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

பேட்டிங்கில் எங்கு தவறு செய்தோம் என்பதில் கவனம் கொடுக்க வேண்டும்: ஷஃபாலி வர்மா

ஒரு அணியாக பேட்டிங்கில் எங்கு தவறு செய்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.

shafali verma

ஷஃபாலி வர்மா - படம் | AP

Published On :31 ஆகஸ்ட் 2026, 5:47 pm IST

ஒரு அணியாக பேட்டிங்கில் எங்கு தவறு செய்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.

துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதன் பின், 127 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த நிலையில், ஒரு அணியாக பேட்டிங்கில் எங்கு தவறு செய்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் ஒரு அணியாக பேட்டிங்கில் என்ன தவறு செய்தோம் என்பதில் கவனம் கொடுத்து எங்களை முன்னேற்றிக் கொள்வோம். தாய்லாந்துக்கு எதிரான ஆட்டம் முடிந்துவிட்டது. அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்த உள்ளோம். துபையில் உள்ள ஆடுகளங்களில் இதற்கு முன்பாக விளையாடியுள்ளோம். எங்களுக்கு இங்குள்ள ஆடுகளங்களின் தன்மை குறித்து தெரியும். புதிய பந்து பேட்டுக்கு நன்றாக வருவதால் நன்றாக விளையாட முடிகிறது. பந்து பழையதானதும் ஆடுகளத்தில் நின்று மெதுவாக வருகிறது. தாய்லாந்து வீராங்கனைகள் நன்றாக பந்துவீசினார்கள் என்றார்.

நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 36 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian opener Shafali Verma has stated that the team needs to focus on where they went wrong with their batting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.