புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

சாதாரணமாக சாம்பியன் ஆகல, முதல் போட்டியிலிருந்து ஆதிக்கம் செலுத்தினோம்: ரஜத் படிதார்

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலிருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியதாக அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

News image

ஐபிஎல் கோப்பையை முத்தமிடும் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :1 ஜூன் 2026, 5:18 pm IST

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலிருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியதாக அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. அகமதாபாதில் நேற்று (மே 31) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம், தங்கள் அணிகளை தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்த கேப்டன்களான மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மா வரிசையில் ரஜத் படிதாரும் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சாதரணமாக சாம்பியன் ஆகவில்லை எனவும், முதல் போட்டியிலிருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியதாகவும் அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், கடந்த ஐபிஎல் சீசனில் அதிக அளவிலான அழுத்தம் இருந்தது. இந்த சீசனில் மிகவும் அமைதியாக இருந்தோம். இந்த தொடர் முழுவதும் எந்த ஒரு அழுத்தமுமின்றி அமைதியாக விளையாடினோம். நாங்கள் வெறுமனே விளையாட மட்டும் இல்லை, இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்தினோம். இப்படியே விளையாடினால், கண்டிப்பாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுவிடுவோம் என்பதில் உறுதியாக இருந்தோம்.

ஆர்சிபி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பிறந்தநாள் பரிசாக நினைக்கிறேன். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Summary

Royal Challengers Bangalore captain Rajat Patidar has stated that the team has dominated the current IPL tournament right from the very first match.