/

ராஜஸ்தான் தோல்வியால் அழுகை: ரசிகர்களின் இதயங்களை வென்ற சூர்யவன்ஷி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து...

News image

ராஜஸ்தான் அணியின் தோல்வியால் அழுத வைபவ் சூர்யவன்ஷி. - படம்: ஏபி, ஜியோ ஹாட்ஸ்டார்.

Updated On :30 மே 2026, 12:48 pm IST

குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியுற்றதால், வைபவ் சூர்யவன்ஷி கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

நேற்றிரவு நடந்த குவாலிஃபயர் 2 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 214/6 ரன்கள் குவிக்க, குஜராத் டைட்டன்ஸ் 18.4 ஓவர்களில் 219/3 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த சீசனில் மொத்தமாக 776 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 237.31ஆகவும் சராசரி 48.50ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 72 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

இந்த சீசனில் 4 ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார். எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 ஆடத்தில் 97, 96 ரன்கள் குவித்து அணியை தனியாளாகத் தாங்கிப் பிடித்தார்.

போட்டிக்குப் பிறகு அழுதுகொண்டே வெளியேறிய சூர்யவன்ஷி டக் அவுட்டில் (வெளிப்புற ஓய்வறை) தொப்பியை வைத்து அழுதுகொண்டிருந்தார். இந்தக் காட்சிகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறாவிட்டாலும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வைபவ் சூர்யவன்ஷி வென்றுள்ளார்.

Summary

Weeping Over Rajasthan's Defeat: Sooryavanshi Wins Fans' Hearts!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.