தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பெங்களூருவை 145 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :25 அக்டோபர் 2020, 11:39 am

DIN


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 44-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர். முதல் விக்கெட்டாக பின்ச் 15 ரன்களுக்கு சாம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார். பவர் பிளே முடிந்த முதல் பந்திலேயே படிக்கல் 22 ரன்களுக்கு மிட்செல் சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடத் தொடங்கினர். நடு ஓவர்களில் பெரிதளவு பவுண்டரிகள் போகாததால் ரன் ரேட் ஓவருக்கு 7-க்குக் கீழ் இருந்தது. இருவரும் கடைசி 5 ஓவர்களில் அதிரடி காட்ட முற்பட்டனர். இந்த நிலையில், தீபக் சஹார் வீசிய 18-வது ஓவரில் டி வில்லியர்ஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய மொயீன் அலி 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் சாம் கரண் வீசிய 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அரைசதத்தை எட்டிய கோலியும் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரை சஹார் சிறப்பாக வீச, ஒரு பவுண்டரி மட்டுமே கிடைத்தது. மாரிஸும் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.