ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கடைசி கட்டத்தில் மாரிஸ் மிரட்டல்: 133 ரன்களுக்குக் கட்டுப்பட்டது கொல்கத்தா

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

News image
நிதிஷ் ராணா
Updated On :24 ஏப்ரல் 2021, 3:53 pm

DIN


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்கள் நிதிஷ் ராணா மற்றும் ஷுப்மன் கில் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

முதல் 5 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கில் 11 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதனால், பவர் பிளே முடிவல் கொல்கத்தா 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பவர் பிளே முடிந்த சிறிது நேரத்திலேயே ராணாவும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சுனில் நரைன் 6 ரன்களுக்கும், கேப்டன் இயான் மார்கன் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து ராகுல் திரிபாதி அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை உயர்த்த, தினேஷ் கார்த்திக் நிதானம் காட்டினார்.

இதனால், 15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 93 ரன்கள் சேர்த்தது.

ஆனால், கடைசி கட்ட அதிரடிக்கு களத்தில் இல்லாமல் 36 ரன்களுக்கு திரிபாதி ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல், கிறிஸ் மாரிஸ் பந்தில் 1 சிக்ஸர் மட்டுமே அடித்த நிலையில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கார்த்திக்கும் அதே ஓவரில் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

கடைசி ஓவரின் முதல் பந்தில் பேட் கம்மின்ஸ் ஒரு சிக்ஸர் அடித்தாலும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால், கொல்கத்தாவுக்கு கடைசி கட்டத்தில் பெரிய அதிரடி கிடைக்கவில்லை. ஷிவம் மவியும் கடைசி பந்தில் 5 ரன்களுக்கு போல்டானார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் தரப்பில் மாரிஸ் 4 விக்கெட்டுகளையும், உனத்கட், முஸ்தபிஸூர் ரஹ்மான், சேத்தன் சகாரியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.