மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டு பிளெஸ்ஸி, அலி 'டக்', ராயுடு காயம்: பவர் பிளேவில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை திணறல்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பாப் டு பிளெஸ்ஸி, மொயீன் அலி டக் அவுட் ஆகி மோசமான தொடக்கத்தைத் தந்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :19 செப்டம்பர் 2021, 2:39 pm

DIN


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பாப் டு பிளெஸ்ஸி, மொயீன் அலி டக் அவுட் ஆகி மோசமான தொடக்கத்தைத் தந்துள்ளனர்.

14-வது ஐபிஎல் சீசனின் இரண்டாம் பகுதி ஆட்டங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கின. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மும்பையில் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாகக் களமிறங்காததால் கைரன் பொல்லார்ட் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர்.

டு பிளெஸ்ஸி, மொயீன் அலி டக்:

டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் டு பிளெஸ்ஸி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆடம் மில்ன் வீசிய அடுத்த ஓவரில் மொயீன் அலியும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ராயுடு காயம்: 

இதையடுத்து, சுரேஷ் ரெய்னாவுக்குப் பதில் அம்பதி ராயுடு முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். மில்ன் வீசிய அதே ஓவரின் கடைசி பந்து ராயுடு கையைத் தாக்க, வலி தாங்க முடியாமல் அவர் வெளியேறினார்.

ரெய்னாவைத் திண்டாட வைத்த போல்ட்:

இதன்பிறகு, சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். போல்ட் வீசிய 3-வது ஓவரின் 2 ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ளத் திணறிய ரெய்னா, கால் நகர்த்துவதில் திணறினார். அதிர்ஷ்டவசமாக ஒரு பவுண்டரி கிடைத்தாலும் மீண்டும் அதே மாதிரி ஷார்ட் ஆட முயற்சித்து 4 ரன்களுக்கு ரெய்னாவும் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, கெய்க்வாட்டுடன் கேப்டன் தோனி இணைந்தார். அவரும் பவர் பிளேவின் கடைசி பந்தில் பவுண்டரி எல்லையில் 3 ரன்களுக்கு கேட்ச் ஆனார்.

பவர் பிளே முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.