நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐபிஎல்: நடராஜனுக்குப் பதிலாகப் புதிய வீரரைத் தேர்வு செய்த சன்ரைசர்ஸ் அணி

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்குப் பதிலாகப் புதிய வீரரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது. 

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 12:08 pm

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்குப் பதிலாகப் புதிய வீரரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் நடராஜனுக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் வலைப்பயிற்சி வீரராக உள்ள மாலிக், குறுகிய கால கரோனா மாற்று வீரராகத் தேர்வாகியுள்ளார். நடராஜன் குணமான பிறகு சன்ரைசர்ஸ் அணியில் மீண்டும் இணைந்து கொள்வார். இந்திய உள்ளூர் போட்டிகளில் ஒரு டி20 மற்றும் ஒரு லிஸ்ட் ஏ ஆட்டங்களில் மட்டுமே மாலிக் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.