ஐபிஎல் போட்டியில் புதிதாக இடம்பெறவுள்ள இரு அணிகள் தொடர்பாகப் புதிய தகவலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
2008 முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது 8 அணிகள் போட்டியிடுகின்றன. ஐபிஎல் போட்டியில் இரு புதிய அணிகளைச் சேர்க்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாத இறுதியில் பிசிசிஐ வெளியிட்டது. புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம். விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுள்ள நிறுவனங்களால் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து 2022 முதல் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. இரு புதிய அணிகளால் பிசிசிஐக்குக் கூடுதலாக ரூ. 7000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கொண்டிருப்பதால் எப்படியும் ஆமதாபாத் நகரின் பெயரில் ஓர் அணி உருவாகும் என அறியப்படுகிறது.
இந்நிலையில் ஏல விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 20 வரை நீட்டித்துள்ளது பிசிசிஐ. பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்ததால் இம்முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை அக்டோபர் 25 அன்று துபையில் பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலக்கை அபாரமாக விரட்டும் அணிகள்: கொல்கத்தா - தில்லி ஆட்ட முடிவை நிர்ணயிக்குமா டாஸ்?
இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம்: உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
ஓய்வில்லை: இலங்கை அணியில் மீண்டும் விளையாட மேத்யூஸ் ஒப்புதல்
ஆம்ப்ரோஸ் மீது எவ்வித மரியாதையும் இல்லை: கிறிஸ் கெயில் சாடல்
டி20 உலகக் கோப்பை அணியில் நரைனுக்கு வாய்ப்பளிக்கப்படுமா?: மே.இ. தீவுகள் கேப்டன் பொலார்ட் பதில்
கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு விளக்கம் அளிக்கவில்லை: டேவிட் வார்னர் வேதனை
பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமி
பாண்டியாவுக்குச் சிக்கல்: வலைப்பயிற்சி வீரராக வெங்கடேஷ் ஐயர் தேர்வு