வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்பிய குல்தீப் யாதவ்

அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை அவரால் எந்தவொரு கிரிக்கெட் ஆட்டங்களிலும் இடம்பெற முடியாது என...

News image
Updated On :27 செப்டம்பர் 2021, 12:10 pm

கொல்கத்தா அணியில் விளையாடும் குல்தீப் யாதவ் காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்.

இந்திய அணிக்காக 7 டெஸ்டுகள், 65 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் குல்தீப் யாதவ் விளையாடியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்குச் சென்ற இந்திய அணியிலும் இடம்பெற்று ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடினார்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள 26 வயது குல்தீப் யாதவ் - கடந்த வருடம் 5 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். இதனால் இந்த வருடம் எந்தவொரு ஐபிஎல் ஆட்டத்திலும் அவர் இடம்பெறவில்லை. 2019 ஐபிஎல் முதல் மிக மோசமாகப் பந்துவீசி வருவதால் இந்திய அணியிலும் தன்னுடைய இடத்தை அவர் இழந்துள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது குல்தீப் யாதவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஃபீல்டிங் செய்தபோது ஏற்பட்ட அந்தக் காயம் தீவிரமாக இருந்ததால் அதற்கு மேலும் ஐபிஎல் போட்டியில் பங்குபெற முடியாத சூழல் உருவானது. இதையடுத்து சிகிச்சைக்காக குல்தீப் யாதவ் உடனடியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக மும்பையில் அறுவைச் சிகிச்சை கொண்டார் குல்தீப் யாதவ். இதனால் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை அவரால் எந்தவொரு கிரிக்கெட் ஆட்டங்களிலும் இடம்பெற முடியாது என அறியப்படுகிறது. குல்தீப் யாதவ் ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகியது பற்றி கேகேஆர் அணி இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.