நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்த இலக்கை அடையும் 3-வது சிஎஸ்கே வீரர்: ஜடேஜாவின் புதிய சாதனை

2012 முதல் சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் ஜடேஜா, 150-வது ஆட்டத்தை விளையாடும் மூன்றாவது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையை அடைவார்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:51 am

DIN

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக 150-வது ஆட்டத்தில் விளையாடவுள்ளார் ஜடேஜா.

நவி மும்பையில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் அணிகள் நாளை விளையாடவுள்ளன. இந்த ஆட்டத்தில்தான் இந்த இலக்கை ஜடேஜா அடையவுள்ளார்.

2012 முதல் சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் ஜடேஜா, 150-வது ஆட்டத்தை விளையாடும் மூன்றாவது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையை அடைவார். இதற்கு முன்பு தோனி 217 ஆட்டங்களிலும் ரெய்னா 200 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்கள்.

சிஎஸ்கேவுக்காக 149 ஆட்டங்களில் 110 விக்கெட்டுகளும் 1523 ரன்களும் எடுத்துள்ளார் ஜடேஜா. கடந்த வருடம் ஆர்சிபி அணிக்கு எதிராக 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். ஹர்ஷல் படேல் ஓவரில் 36 ரன்கள் எடுத்துச் சாதனை செய்தார். 

இந்த வருடம் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதையடுத்து, சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.