ஐபிஎல்: முதல் அரை சதத்துக்காக நீண்ட நாள் காத்திருந்த வீரர் யார்?
ஐபிஎல் போட்டியில் 70 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரை சதத்தை எடுத்துள்ளார் ஆர். அஸ்வின்.


ஐபிஎல் போட்டியில் 70 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரை சதத்தை எடுத்துள்ளார் ஆர். அஸ்வின்.
நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி அணி. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். இதன்பிறகு விளையாடிய தில்லி அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 89, வார்னர் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார்கள்.
ஐபிஎல் போட்டியில் 70 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரை சதத்தை எடுத்துள்ளார் ராஜஸ்தான் அணி வீரர் ஆர். அஸ்வின். 3-ம் நிலை வீரராகக் களமிறங்கியதால் அவரால் நேற்று அரை சதமெடுக்க முடிந்தது. ஐபிஎல் போட்டியில் முதல் அரை சதத்தை எடுக்க அதிக இன்னிங்ஸ் தேவைப்பட்ட வீரர்களின் அஸ்வினுக்கு 2-ம் இடம். இதற்கு முன்பு ஜடேஜா, 131 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரை சதத்தை எடுத்தார்.
ஐபிஎல்: முதல் அரை சதமெடுக்க அதிக இன்னிங்ஸ் தேவைப்பட்ட வீரர்கள்
131 - ஜடேஜா
70 - அஸ்வின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...