கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

ஜடேஜா இயல்பான கேப்டன் இல்லை: ரவி சாஸ்திரி

சிஎஸ்கே அணியின் கேப்டனாகி பிறகு விலகியது பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

News image

ஜடேஜா - தோனி

Updated On :11 மே 2022, 3:23 pm IST

ஆல்ரவுண்டர் ஜடேஜா, சிஎஸ்கே அணியின் கேப்டனாகி பிறகு விலகியது பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டி தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகினார். இதையடுத்து ஜடேஜா, சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதால் திடீரென கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகினார். இந்த நெருக்கடியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் தேர்வானார். அதற்குப் பிறகு சிஎஸ்கே விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் கிரிக்இன்ஃபோவுக்கு அளித்த பேட்டியில் ஜடேஜா பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதாவது:

ஜடேஜா இயல்பான கேப்டன் இல்லை. இதற்கு முன்பு உள்ளூர் போட்டிகள் உள்பட எவ்வித அளவிலும் அவர் கேப்டனாகப் பதவி வகித்ததில்லை. எனவே அவருக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது கூடுதல் சுமையாகவே இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். ஜடேஜாவின் தலைமைப் பண்பு குறித்து மதிப்பிட மக்கள் விரும்புவார்கள். ஆனால் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டது அவருடைய தவறல்ல. அவர் எப்போதும் கேப்டனாக இருந்ததில்லை. தண்ணீருக்கு வெளியே மீன் இருந்தது போலவே அப்பதவிக்குத் தொடர்பில்லாமல் இருந்தார். அதைவிடவும் ஒரு வீரராக அவரால் சிறப்பாகச் செயலாற்ற முடியும். சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். எனவே அவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவேண்டும். அவரை கேப்டனாக்கியதால் சிஎஸ்கே சில ஆட்டங்களை இழந்தது. இப்போது அவர்கள் விளையாடியதைப் போல முன்பே விளையாடியிருந்தால் புள்ளிகள் பட்டியலில் முன்னணியில் இருந்திருப்பார்கள் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.