நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அதிக விக்கெட்டுகள் பட்டியலில் சஹால் மீண்டும் முதலிடம்

மும்பை : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார். 

News image
Updated On :16 மே 2022, 11:20 am IST

மும்பை : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார். 

இந்த ஐபிஎல் 2022 போட்டியில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் இருப்பது தெரிந்ததே. முந்தைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் வனிந்து ஹசரங்கா 23 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் இருந்தார். நேற்று நடந்த ஐபிஎல் 63வது போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஸ்பின் பவுலர் யுஸ்வேந்திர சஹால் 1 விக்கெட் எடுத்து 24 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார். ஊதா நிறத் தொப்பி (பர்பிள் கேப்) தற்போதைக்கு அவரிடமே உள்ளது. 

ஒரு சீசனில் அதிக விக்கெட் எடுத்தது சென்னை அணியின் ப்ராவோ 2013இல் 32 மற்றும் பெங்களுரூ அணியின் ஹர்ஷல் பட்டேல் 2021இல் 32 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தில் உள்ளனர். 

யுஸ்வேந்திர சஹால் இதை முறியடிப்பாரா இல்லையா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.