மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தேவை ஏற்பட்டால் மட்டுமே தோனி இதை செய்வார்: முன்னாள் ஆஸி. வீரர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் பேசியுள்ளார்.

News image
எம்.எஸ்.தோனி - படம் | ஐபிஎல்
Updated On :1 ஏப்ரல் 2024, 12:47 pm

DIN

மகேந்திர சிங் தோனி 8-வது இடத்தில் களமிறங்குவார் எனவும், தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர் அதற்கு முன்பாக களமிறங்குவார் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியது.

16 பந்துகளில் 37 ரன்கள் குவித்த தோனியின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இருப்பினும், தோனியின் அதிரடியான ஆட்டத்தால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள், தோனி சீக்கிரமாக களமிறக்கப்பட்டிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என தோனிக்கு புகழாரம் சூட்டி வருகிறார்கள்.

மைக்கேல் கிளார்க் (கோப்புப்படம்)

மைக்கேல் கிளார்க் (கோப்புப்படம்)

இந்த நிலையில், மகேந்திர சிங் தோனி 8-வது இடத்தில் களமிறங்குவார் எனவும், தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர் அதற்கு முன்பாக களமிறங்குவார் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தோனி சீக்கிரமாக களமிறங்குவார் என நான் நினைக்கவில்லை. அவர் எப்போதும் எந்த இடத்தில் களமிறங்குகிறாரோ அதே இடத்திலேயே களமிறங்குவார். தோனியின் ரசிகர்கள் அவர் விரைவில் களமிறங்க வேண்டும் என நினைக்கிறார்கள். தோனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என நாங்கள் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆனால், கேப்டன் பதவியை விட்டு விலகிய அவர், சீக்கிரமாக களமிறங்குவார் என நான் நினைக்கவில்லை. அவர் கட்டாயம் சீக்கிரமாக களமிறங்கியாக வேண்டும் என்ற சூழல் உருவாகும்போது, அணிக்காக சீக்கிரமாக களமிறங்குவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.