லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து, லக்னௌ முதலில் பேட் செய்கிறது. கடந்த போட்டியில் கேப்டன் பொறுப்பிலிருந்து ஓய்விலிருந்த கே.எல்.ராகுல் மீண்டும் கேப்டனாக அணியை வழிநடத்துகிறார்.