ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரரால் பஞ்சாப் வெற்றி: குவியும் வாழ்த்துகள்!

ஐபிஎல் 17-ஆவது ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் த்ரில் வெற்றி பெற்றது.
சஷாங்க் சிங்
சஷாங்க் சிங்

ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இதற்கு முக்கியம காரணமானவர் 32 வயதான சஷாங்க் சிங். இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால் அவர்கள் அடுக்க நினைத்தது 19 வயது சஷாங்க் சிங். ஆனாலும் பஞ்சாப் அவருக்கு வாய்ப்பளித்தது.

15 ஐபிஎல் போட்டிகளில் 9 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி 160 ரன்கள் எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வந்த இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.

சஷாங்க் சிங்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அவமானமாக இருக்கிறது: ரிக்கி பாண்டிங் வருத்தம்!

நேற்றையப் போட்டியில் 200 ரன்கள் என்ற இலக்கினை விரட்டும்போது சீனியர் வீரர்கள் ஆட்டமிழக்க குறைவான ஆட்டம் ஆடிய சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

ஆட்ட நாயகன் விருதுபெற்ற சஷாங்க் சிங்குக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தன்னம்பிக்கை நிரம்பியுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

சஷாங்க் சிங்
16 வருடமாக ஆர்சிபி செய்யும் தவறு இதுதான்: அம்பத்தி ராயுடு விளாசல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com