தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

விராட் கோலி எப்போது பயிற்சி முகாமில் இணைவார்?

தாயகம் திரும்பியுள்ள இந்திய அணியின் விராட் கோலி விரைவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image

விராட் கோலி

Updated On :17 மார்ச் 2024, 5:38 pm IST

தாயகம் திரும்பியுள்ள இந்திய அணியின் விராட் கோலி விரைவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டன. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை. அவர் இதுவரை ஆர்சிபி பயிற்சி முகாமிலும் இணையவில்லை.

இந்த நிலையில், விராட் கோலி இந்தியாவுக்கு வந்துவிட்டதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு தயாராக உள்ளதாகவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் இந்தியாவுக்கு வந்துவிட்டபோதிலும், எப்போது பயிற்சி முகாமில் இணைவார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அவர் விரைவில் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி 639 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.