விராட் கோலியுடன் பேட்டிங் செய்வது குறித்து மனம் திறந்த டு பிளெஸ்ஸி!

விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்த அனுபவம் குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
விராட் கோலியுடன் பேட்டிங் செய்வது குறித்து மனம் திறந்த டு பிளெஸ்ஸி!
Published on
Updated on
1 min read

விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்த அனுபவம் குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில நாள்களில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி லண்டனிலிருந்து நேற்று இந்தியா வந்தடைந்தார்.

இந்த நிலையில், விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்த அனுபவம் குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

விராட் கோலியுடன் பேட்டிங் செய்வது குறித்து மனம் திறந்த டு பிளெஸ்ஸி!
பெங்களூரு அணியைக் கிண்டலடித்த ராஜஸ்தான் அணி!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலியுடன் பேட்டிங் செய்வது நம்ப முடியாத விதமாக இருக்கும். அவருடன் பேட்டிங் செய்வதை நான் எப்போதும் விரும்புகிறேன். எனக்குள் இருக்கும் சக்தியை வெளியில் கொண்டுவருவதற்கு அவர் உதவுகிறார். அவரால் எப்போதும் எவ்வாறு உற்சாகமாக இருக்க முடிகிறது என வியந்திருக்கிறேன். பந்தினை கேட்ச பிடிக்கும்போது கூட நாங்கள் இருவரும் கடும் போட்டியாளராக இருப்போம். அதன் காரணத்தினால் அணிக்காக சிறந்த கேட்ச்சுகளை எங்களால் பிடிக்க முடிகிறது. அவர் அணியின் கேப்டனாக இல்லாதபோதிலும், அணியை வழிநடத்த எனக்கு சிறப்பாக உதவுகிறார் என்றார்.

விராட் கோலியுடன் பேட்டிங் செய்வது குறித்து மனம் திறந்த டு பிளெஸ்ஸி!
சென்னை-ஆர்சிபி போட்டிக்கான டிக்கெட் விற்பனைத் தளம் முடங்கியது

இந்த ஆண்டு வரும் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com