ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வனிந்து ஹசரங்கா விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் வெள்ளைப் பந்து போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஹசரங்காவின் பெயரையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதன் காரணமாக ஹசரங்கா முதல் மூன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்கா சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ. 1.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.