மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடருக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில நாள்களில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அண்மையில் இணைந்த அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள விடியோவை மும்பை அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த விடியோ பின்வருமாறு:
மும்பை அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.