சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, சிஎஸ்கே முதலில் பேட் செய்கிறது.
சென்னை அணியில் மஹீஸ் தீக்ஷனாவுக்குப் பதிலாக மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு இரு அணிகளும் மோதவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.