கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்குக்கு விராட் கோலி பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்குக்கு தனது பேட்டினை விராட் கோலி பரிசளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
விராட் கோலி தனது பேட்டை பரிசளிக்க அதனை ரிங்கு சிங் பெற்றுக் கொள்ளும் புகைப்படம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.