தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

News image

ஸ்ரேயாஸ் ஐயர்

படம் | ஐபிஎல்

Updated On :4 மே 2024, 11:57 am

DIN

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இம்பாக்ட் பிளேயராக களம் கண்ட மணீஷ் பாண்டே, வெங்கடேஷ் ஐயருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

இந்த நிலையில், இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

மணீஷ் பாண்டே

மணீஷ் பாண்டே

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: போட்டியின்போது மிட்செல் ஸ்டார்க்கிடம் பேசினேன். இந்தப் போட்டி எங்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அவரிடம் கூறினேன். இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், அடுத்து விளையாடவுள்ள 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற வேண்டியிருக்கும். இந்த வெற்றி எங்களுக்கு அவசியமானது.

இம்பாக்ட் பிளேயர் விதி இந்த வெற்றிக்கு உதவியாக இருந்தது. முதல் நாளிலிருந்தே மணீஷ் பாண்டே வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இன்று அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் சிறப்பாக செயல்பட்டார். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன் சிறப்பாக செயல்பட்டனர். வெங்கடேஷ் ஐயர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றார்.

இக்கட்டான சூழலில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய மணீஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.