மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் - படம் | AP

Published On :

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரியான் ரிக்கல்டான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.

சூர்யகுமார் யாதவ் சாதனை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 9 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்த போட்டியில் 27 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்தார். டி20 போட்டிகளில் இதுவரை அவர் 8,007* ரன்கள் குவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள இந்திய வீரர்கள்

விராட் கோலி - 12,976 ரன்கள்

ரோஹித் சர்மா - 11, 851 ரன்கள்

ஷிகர் தவான் - 9,797 ரன்கள்

சுரேஷ் ரெய்னா - 8,654 ரன்கள்

சூர்யகுமார் யாதவ் - 8,007 ரன்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.