நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

News image

சூர்யகுமார் யாதவ் - படம் | AP

Updated On :3 ஏப்ரல் 2025, 6:39 pm IST

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரியான் ரிக்கல்டான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.

சூர்யகுமார் யாதவ் சாதனை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 9 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்த போட்டியில் 27 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்தார். டி20 போட்டிகளில் இதுவரை அவர் 8,007* ரன்கள் குவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள இந்திய வீரர்கள்

விராட் கோலி - 12,976 ரன்கள்

ரோஹித் சர்மா - 11, 851 ரன்கள்

ஷிகர் தவான் - 9,797 ரன்கள்

சுரேஷ் ரெய்னா - 8,654 ரன்கள்

சூர்யகுமார் யாதவ் - 8,007 ரன்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.