அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!

லக்னௌ-மும்பை போட்டிக்குப் பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து...

News image

செய்தியாளரின் அழைப்பினை எடுத்த ஜஸ்டின் லாங்கர். - படங்கள்: எக்ஸ் / ஐபிஎல்

Updated On :5 ஏப்ரல் 2025, 1:20 pm IST

நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் லக்னௌ அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கலந்துகொண்டார்.

அந்தச் சந்திப்பின்போது, வாய்ஸ் - ரெக்கார்ட் செய்ய வைக்கப்பட்ட செய்தியாளர் ஒருவரின் மொபைல் போனில் இருந்து அம்மா என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

”யாருடைய அம்மா?” என சம்பந்தப்பட்ட செய்தியாளரிடம் அனுமதிக் கேட்டுக்கொண்டு அந்த அழைப்பினை எடுத்தார் ஜஸ்டின் லாங்கர்.

அழைப்பை எடுத்த ஜஸ்டின் லாங்கர், “அம்மா, இது நள்ளிரவு 12.08. நான் செய்தியாளர் சந்திப்பில் இருக்கிறேன்” எனக் கூறி வைத்துவிட்டார்.

இது அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகி வருகிறது. பலரும் அம்மா என்றால் இப்படித்தான் என நெகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜஸ்டின் லாங்கர் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்டர். இவரது பயிற்சியில் 2021 டி20 உலகக் கோப்பையை ஆஸி. வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, 2023இல் இருந்து லக்னௌ அணியில் பயிற்சியாளராக இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.