மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பஞ்சாபை பதற்றம் அடையச் செய்த 43 வயது விவசாயி: டி.ஜெயக்குமார் புகழாரம்!

தோனியை புகழ்ந்து ஜெயக்குமார் பதிவிட்டிருப்பது பற்றி...

News image
மகேந்திர சிங் தோனி - PTI
Updated On :9 ஏப்ரல் 2025, 5:53 am

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனியை புகழ்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 22-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை இரவு மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, பிரியன்ஷ் அதிரடி சதத்தால் 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சென்னை அணி, 20 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் பின்னதாக களமிறங்கும் தோனியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 5-வது வீரராக களமிறங்கினார்.

3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த தோனி, கடைசி ஓவரில் அவுட்டானார்.

முன்னதாக களமிறங்கிய தோனி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தோனியை புகழ்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “பஞ்சாப் அணி வீரர்களை பதற்றம் அடையச் செய்த 43- வயதுடைய விவசாயி. தனக்கான தோரணையோடு‌ தோனி களத்தில் தொடர்கிறார். மரம் நடும் சேவையை மாற்றிக்கொண்டு மஞ்சள் ரசிகர்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

ஜெயக்குமாரின் பதிவுக்கு சென்னை அணி ரசிகர்கள் வரவேற்றும் விமர்சித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.