18-ஆவது ஐபிஎல் சீசனில் முதல் போட்டியைத் தவிர மீதம் விளையாடிய 5 போட்டிகளில் சிஸ்கே அணி தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் தோல்வியுற்று மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கேகேஆருக்கு எதிராக நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே 103/9 ரன்களை எடுக்க, கேகேஆர் அணி 10.1 ஓவரில் 107/2 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணியில் பேட்டிங் மிக மோசமாக இருக்கிறது. இது குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறியதாவது:
நல்ல வீரர்கள் இருப்பதாகவே நம்புகிறேன்
எங்களிடம் நல்ல வீரர்கள் இருப்பதாகவே இப்போதும் நம்புகிறேன். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் தொடர்ச்சியாக நன்றாக விளையாடவும் உதவ முயல்கிறோம்.
பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எதுவானாலும் இப்போதைய நிலையிலிருந்துதான் அவர்களை சீராக்கி வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது.
நாங்கள் விளையாடும் முறை குறித்து அதிகமான விமர்சனங்களைப் பார்க்கிறேன்.
வித்தியாசமாக விளையாடுமாறு எதிர்பார்க்க முடியாது
எங்களிடம் இருக்கும் வீரர்களிடம் முற்றிலும் வித்தியாசமாக விளையாடுமாறு எதிர்பார்க்க முடியாது.
எங்களது வீரர்களுக்கு அவர்கள் விளையாடும் ஷாட்டுகள் இயல்பானது. அவர்களது பாணியில் நன்றாக விளையாட ஐபிஎல் வந்திருக்கிறார்கள்.
நான் அவர்களிடம் வித்தியாசமாக விளையாடுங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் அவர்களால் அவ்வளவுதான் விளையாட முடியும்.
ஃபார்மின் கடைசி கட்ட காலத்தில் சிஎஸ்கேவுக்கு வருபவர்கள்
வீரர்கள் தங்களது பிரைம் ஃபார்முக்கு பிறகு இங்கு வருகிறார்கள் என்பதை விமர்சிப்பேன். ஆனால், தங்களது ஃபார்மின் கடைசி கட்ட காலத்தில் சிஎஸ்கேவுக்கு வருபவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள்.
ஷேன் வாட்சன், அஜிங்க்யா ரஹானே சிஎஸ்கே அணிகாக நன்றாக விளையாடியுள்ளார்கள்.
எங்களிடம் இருக்கும் வீரர்களிடம் இன்னமும் சிறிது நல்ல கிரிக்கெட் இருக்கிறது. அவர்களால் அதைச் செய்ய முடியுமென நினைக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் ஆகிறாரா அஸ்வின்?
உலகக் கோப்பை தோல்வி! குரோஷிய அணியின் பயிற்சியாளர் ராஜிநாமா!

அநீதி இழைக்கப்பட்டது... தோல்விக்குப் பிறகு கொந்தளித்த எகிப்து அணியின் பயிற்சியாளர்!

பாலியல் சீண்டல்: பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர், மேலாளருக்கு வாழ்நாள் தடை!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



