ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

ஐபிஎல் தொடரிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் வேகப் பந்துவீச்சாளர் விலகல்!

ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் விலகியுள்ளார்.

News image

படம்

Updated On :15 ஏப்ரல் 2025, 7:59 pm IST

ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் விலகியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

லாக்கி ஃபெர்குசன் விலகல்

காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பந்துவீச்சின்போது, லாக்கி ஃபெர்குசனுக்கு அசௌகரியம் ஏற்பட்டது. அதனால், அவர் இரண்டு பந்துகளுக்குப் பிறகு அந்த ஓவரை வீசாமல் பெவிலியனுக்குத் திரும்பினார். காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.